written by:
Dr. M.H.M. Nazeem, Senior Lecturer, Colombo University, Unani Section
BUMS (Hons) MPhil Unani (Colombo), EMA (Ceylon Medical College Council)

Note: There will be delay in replying to your question
குறிப்பு: இப்பகுதியில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு டாக்டர்களின் பதில் அளிப்பதில் தாமதமாகலாம்.



மகப்பேறின்மை அல்லது Infertility என்பது தொடர்ச்சியாக ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கு மேல்கலெகத்திலிருந்து முட்டை வெளியேறும் காலங்களில் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டும் கருகட்டாத நிலையைக் குறிக்கும் இந்நிலை நவீன மருத்துவத்துறைக்கு கூட ஒரு சவாலாகவே உள்ளது. காரணம் பிள்ளைப்பாக்கியமற்றவர்களைப் பல பரிசோதனைக்கு உட்படுத்தினாலும் கூட அநேகமானவர்களது ஆய்வு கூடப் பரிசோதனைகளில் எதுவிதமான வித்தியாசங்களையும் காண முடியாமல் இருப்பதாகும். மகப்பேறின்மை கணவன் மனைவி இருவரில் ஒருவரோ அல்லது சில வேளைகளில் இருவரிலுமோ காணப்படுகின்ற குறைபாடுகளினால் ஏற்படலாம்.

இன்றைய இளம் சந்ததியினருக்கு திருமண வாழ்க்கையின் உண்மையான தத்துவம் தாம்பத்திய வாழ்க்கைக்குத் தேவையான அறிவு போன்ற முக்கிய விடயங்கள் தெரியாமல் இருப்பதும் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் பிள்ளைப்பாக்கியமின்மைக்கும் முக்கிய காரணமாகும்.

மேற்குறிப்பிட்டுள்ள வரைவிலக்கணத்தின் படி சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் தினத்தில் அல்லது அதற்கு அடுத்த நாள் தம்பதிகள் வாழ்வில் ஈடுபட்டால் மாத்திரமே கருக்கட்டக் கூடிய வாய்ப்பு அதிகம் என்பது ஒரு முக்கியமான விடயமாகும். இவ்வாறு சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் நிகழ்வு Ovulation என அழைக்கப்படும்.

எனவே இந்த முட்டை வெளியேறும் தினத்தை அறிந்து கொள்வது எப்படி என்பது ஒரு முக்கியமான விடயமாகும். சராசரியாக 28 நாட்களுக்கொருமுறை மாதவிடாய் ஏற்படுபவர்களுக்கு பொதுவாக மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளிலிருந்து 14 ஆம் நாள் தான் Ovulation எனப்படும் சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் நிகழ்வு ஏற்படும். எனவே இக்குறிப்பிட்ட தினத்திலிருந்து ஒரு சில நாட்களுக்குத் தொடர்ச்சியாக தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் கருக்கட்டக் கூடிய சாத்தியம் அதிகம். ஆயினும் 28 நாட்களுக்கொருமுறை மாதவிடாய் ஏற்படுபவர்களுக்கு பொதுவாக மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளி லிருந்து 14 ஆம் நாள் தான் Ovulation எனப்படும் சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் நிகழ்வு ஏற்படும். எனவே இக்குறிப்பிட்ட தினத்திலிருந்து ஒரு சில நாட்களுக்குத் தொடர்ச்சியாக தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் கருக்கட்டக்கூடிய சாத்தியம் அதிகம். ஆயினும் 28 நாட்களுக்கு முன் அல்லது பின்பு மாதவிடாய் ஏற்படுபவர்களுக்கு 14 ஆம் நாளில் முட்டை வெளியேறுவது என்பது ஒரு முக்கியமான விடயமாகும். இவர்களுக்கு ஒரு சில நாட்கள் முந்தியோ அல்லது பிந்தியோ முட்டை வெளியேறலாம்.

எனவே மருத்துவ அறிவு இல்லாத பெண்கள் முட்டை வெளியேறுவதை எவ்வாறு தெரிந்து கொள்வது? இதை உடம்பில் வெளிக்காட்டக் கூடிய சில குறிகுணங்களை வைத்து ஊகித்துக் கொள்ளலாம். அதாவது சூலகத்திலிருந்து முட்டை வெளியேறுவதற்கு முதல் நாளிலிருந்தே மார்பகம் இறுக்கமாக இருத்தல், உடம்பின் வெப்பநிலை கூடுதல், வயிற்றின் கீழ் இடது அல்லது வலது பக்கத்தில் பிடிப்புடன் கூடிய வலி, பெண் உறுப்பிலிருந்து ஒரு வகைத் திரவம் வெளியேறுதல், வயிறு ஊதுதல் தலையிடி, குமட்டல் முகபாவத்தில் மாற்றம் ஏற்படல் போன்றவைகளில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகளோ காணப்படலாம்.

ஒரு சில பெண்களுக்கு எதுவிதமான அறிகுறிகளும் காணப்படாமலும் இருக்கலாம். உடம்பின் வெப்பநிலையை வெப்பமானியைப்பாவித்து சாதாரண மக்களும் தெரிந்து கொள்ளலாம். மேற்கூறிய அறிவுரைகளை கவனத்திற்கொண்டு தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டும் தொடர்ந்து 1 வருடத்திற்கு கருக்கட்டாமல் இருக்கும் நிலையே பிள்ளைப்பாக்கியமின்மை எனக் கருதி அதற்குரிய பரிசோதனைகளும் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்குரிய பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது ஆண்களே முதலில் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றார்கள். காரணம் பெண்களுக்கான பரிசோதனைகளுக்கான கட்டணம் அதிகம் என்பதால் ஆகும். எனவே கணவனில் ஏதும் குறைகள் காணப்படாத போது தான் மனைவியை பரிசோதிக்கின்றார்கள்.

இன்று எமது சமூகத்திலுள்ள பெரும் நோய்களில் ஒன்று தான் திருமணத் தம்ப திகளுக்கு திருமண வாழ்க்கை பற்றி அறிவுரைகளை கொடுக்கின்றோமா? இல்லை.

இதற்கு மாறாக திருமணத் தம்பதிகளின் குடும்ப அங்கத்தவர்கள் திருமண வைபவத்தைச் சிறப்பாக நடாத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள். எனவே ஒவ்வொரு கிராம மட்டத்திலும் குடும்பம் மற்றும் தாம்பத்திய வாழ்க்கை முறைபற்றி விழிப்புணர்வை தொடர்ந்தும் மேற்கொள்வதன் மூலம் திருமணத் தம்பதிகளுக்கு ஏற்படும் பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். .

பிள்ளைப் பாக்கியமின்மைக்காகப் பாவிக்க கூடிய மருந்துகள் விஷேடமாக ஹோர்மோன்கள் அதிகம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே இதற்காக விசேட பயிற்சி பெற்ற மகப்பேற்று வைத்தியர்களை நாடி சிகிச்சை பெறுவதே நன்று.

யுனானி வைத்தியத்துறையிலும் இதற்கான பக்கவிளைவுகளற்ற பல விசேட சிகிச்சை முறைகள் இருப்பதோடு பெண்நோய்களுக்கான விசேட பட்டப்பின்படிப்பை மேற்கொண்ட பல யுனானி வைத்தியர்களும் உள்ளனர்.

இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது பிள்ளைப்பாக்கியமற்றவர்களை 'மலடி' என எமது சமூகத்தில் அழைப்பது ஒரு சர்வசாதாரண விடயமாக தோன்றலாம். ஆனால் இந்தச் சொல் மனநல ரீதியாகவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவர்களை "மலடி” எனக் கூறாமல் இருப்பது நல்லது.